சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் - உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்‍கு மட்டும் அனுமதி

Jul 6 2020 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு அமலுக்கு வந்தது.

பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களுக்கு, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக, தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு, இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேநீர் கடைகளில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சல் சேவைகளுக்கு அனும‌‌தி அளிக்கப்படுவதாகவும், காற்கறி மற்றும் மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாகவும், வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோ ரூம்கள் மற்றும் நகை, ஜவுளி போன்ற பெரியக் கடைகள், ஏற்கனவே அறிவித்திருந்த வழிமுறைகளுடன், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00