சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் - உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி
Jul 6 2020 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு அமலுக்கு வந்தது.
பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களுக்கு, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக, தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு, இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேநீர் கடைகளில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சல் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், காற்கறி மற்றும் மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாகவும், வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோ ரூம்கள் மற்றும் நகை, ஜவுளி போன்ற பெரியக் கடைகள், ஏற்கனவே அறிவித்திருந்த வழிமுறைகளுடன், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.