உதகையில் வெட்டிவேரில் முகக்கவசம் தயாரிக்கும் பெண்மணி : கொரேனாவைக் கட்டுப்படுத்த லாபநோக்கமின்றி விற்பனை
Jul 5 2020 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் ஒருவர், வெட்டி வேரில் தயாரித்துள்ள முகக் கவசம், அமோக வரவேற்பைப் பெற்றதை அடுத்து, நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் வெட்டி வேரின் தன்மை அறியாதததால் இந்த முகக் கவசத்தை யாரும் வாங்கவில்லை. ஆனால் தற்போது இந்த முகக் கவசத்தை பலரும் வாங்கி செல்வதாகக்கூறும் ஐஸ்வர்யா, இந்த முகக்கவசத்தை 5 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும், பின்பு சாதாரண நீரில் துய்மைபடுத்தினால் போதும் என்றும் தெரிவித்தார். ஒரு முகக்கவசம் தயாரிக்க 20 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை செலவு செய்வதாகவும் ஐஸ்வர்யா கூறினார்.