ரோந்து பணிகளில் ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தேவையில்லை : சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
Jul 5 2020 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரோந்து பணிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸை ஈடுபடுத்த வேண்டிய தேவையில்லை என்றும், காவல்துறையின் அதிகாரத்தை கம்யூனிட்டி போலீஸ் பயன்படுத்த முடியாது எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரை அருகில் உள்ள அண்ணா வளைவில் நடைபெறும் வாகன சோதனையை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "முழு ஊரடங்கிற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளதாகவும் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்த்தால் மட்டுமே நோயை கட்டுப்படுத்த முடியும் என்றூம் தெரிவித்தார். ரோந்து பணிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீசை உபயோகப்படுத்த அவசியமில்லை எனவும் திரு. மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.