சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதான போலீசாருக்கு சிறையில் தனி அறை - சக கைதிகள் நெருங்காத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள்
Jul 5 2020 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதான போலீசாரை பிற கைதிகள் நெருங்காத வண்ணம் மதுரை சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் என்பவரும், அவரது மகன் பென்னிக்சும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ் , பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திருமதி ஹேமா உத்தரவிட்டார். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் ஐவரும் அடைக்கப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கிருந்து அவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். 5 பேரையும் டி.எஸ்.பி தலைமையில் 10 பேர் பேர் கொண்ட காவல்படையினர், உரிய பாதுகாப்புடன் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு அங்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிற சிறைக் கைதிகள் அவர்களை நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.