மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடரும் கனமழை - குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுப்பு
Jul 5 2020 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.
தென்மேற்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்திருப்பதால், கேரளாவை ஒட்டிய தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழையின் தீவிரம் அதிகரித்திருப்பதால், அங்குள்ள குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய இடங்களில் இன்று பிற்பகல் முதல் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எனினும் ஊரடங்கு அமலில் இருப்பதால், அங்கு குளிப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக குற்றால அருவி பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.