திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அமமுக நிர்வாகியின் தாயார் மறைவு : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்
Jul 5 2020 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அமமுக நிர்வாகியின் தாயார் மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு.M.அன்சாரி உசேனின் தாயார் திருமதி. ஹைரூன் நிஷா உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார் -
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் திரு.டிடிவி தினகரன் கூறியுள்ளார்.