நடிகர் விஜய்யின் சென்னை வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறை சோதனை
Jul 5 2020 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், உடனடியாக அங்கு மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த மர்மநபர் ஒருவர் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சாலிகிராமத்தில் உள்ள விஜயின் இரு வீடுகளிலும் மோப்பநாய்கள் உதவியுடன் சோதனை நடைபெற்றது. ஒன்றரை மணிநேரம் இரண்டு வீடுகளிலும் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நள்ளிரவு 2 மணிக்கு சோதனையை நிறைவு செய்த நிபுணர்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். மிரட்டல் விடுத்த நபரின் தொலைபேசி எண்ணை வைத்து அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நடிகர் விஜய் தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருக்கும் நிலையில், சாலிகிராமம் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.