தமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.17.14 கோடி அபராதம் வசூல்
Jul 5 2020 12:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 17 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 102 நாட்களில், 8 லட்சத்து 5 ஆயிரத்து 503 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். 7 லட்சத்து 34 ஆயிரத்து 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 15 ஆயிரத்து 877 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம், 17 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரத்து 831 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.