திருச்சியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
Jul 3 2020 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் பர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. திருச்சி அரியமங்கலம் கணபதிநகரில் தனியாருக்குச் சொந்தமான பர்னிச்சர் பொருட்கள் தயாரித்து விற்கும் குடோன், உள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீயால் குடோனிலிருந்த பர்னிச்சர்கள் மற்றும் அதன் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் ஆகியவை எரிந்தன. தகவலறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்புப் படையினர் 3 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.