ஜெயராஜ், பென்னிக்ஸை கோவில்பட்டி கிளைச் சிறைக்கு கொண்டு சென்ற தனியார் வாகன ஓட்டுனரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை - அரசு மருத்துவர் வெணிலாவுடன் இருந்த செவிலியரிடமும் விசாரணை
Jul 3 2020 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை-மகன் கொல்லப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை செவிலியர் மற்றும் தனியார் வாகன ஓட்டுனரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வழக்கறிஞர்கள் கார்த்தீசன், அலெக்சாண்டர் ஆகியோரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். ஜெயராஜ், பென்னிக்ஸை போலீசார் அடித்து இழுத்துச்சென்றபோது இந்த இரு வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்களிடம் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை செவிலியரிடமும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்சை கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அழைத்துச் சென்ற தனியார் வாகன ஓட்டுனரிடமும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.