சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு - விசாரணையைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார் பெண் காவலர் ரேவதி
Jul 3 2020 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டைக் கொலை வழக்கில், மாவட்ட நீதிபதியிடம் பெண் தலைமைக்காவலர் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார்.
சாத்தான்குளம் கொலை தொடர்பாக பெண் தலைமைக்காவலர் ரேவதி பல்வேறு உண்மைகளை வாக்குமூலமாக அளித்தது வழக்கின் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து, தனக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி ரேவதி கேட்டுக்கொண்டதன்பேரில், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரேவதியிடம் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா விசாரணை நடத்தினார். அப்போது, இரட்டைக் கொலை வழக்கில், நீதிபதியிடம் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார்.