சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - ஜெயராஜ் தரப்பு வழக்கறிஞர்களிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை
Jul 3 2020 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை-மகன் கொல்லப்பட்ட வழக்கில் ஜெயராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வழக்கறிஞர்கள் கார்த்தீசன், அலெக்சாண்டர் ஆகியோரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். ஜெயராஜ், பென்னிக்ஸை போலீசார் அடித்து இழுத்துச்சென்றபோது இந்த இரு வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்களிடம் பாரதிதாசன் விசாரணை நடத்தியுள்ளார்.