தமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்‍கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு - தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Jul 3 2020 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்‍கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கில், தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவல்துறையினர் சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை அளிக்‍க அனைத்து மாநிலங்களிலும் 'காவல்துறை புகார் ஆணையம்' அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதற்கு எதிராக அமைக்கப்பட்ட 'காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்ட விதிகளை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்‍கு வந்தது. அப்போது, சாத்தான்குளம் சம்பவம்போல் மேலும் நடைபெறாமல் இருக்க உச்சநீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல்களின்படி காவல்துறை புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, இதே கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00