சாத்தான்குளம் கொலை வழக்கு விவகாரத்தில் தேடப்படும் காவலர் முத்துராஜ் - நீதிமன்றத்தில் சரணடையப்போவதாக தகவல்
Jul 3 2020 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திரு.சங்கர், இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகனை இன்னும் 2 நாட்களில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
இவ்வழக்கில் தப்பியோடிய காவலர் முத்துராஜ், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை 2 அல்லது 3 நாட்களில் கைது செய்துவிடுவோம் என்றும் திரு.சங்கர் கூறினார்.
இதனிடையே, சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ், விளாத்திக்குளம் அல்லது கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.