பெரம்பலூரில் படுகொலை செய்யப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி உடலுக்கு கழகம் சார்பில் அஞ்சலி
Jun 4 2020 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூரில் படுகொலை செய்யப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி உடலுக்கு, கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் நகர மாணவரணி செயலாளரான திரு.பாண்டி என்கிற வல்லத்தரசுவை நேற்று முன் தினம் மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கடும் கண்டனத்தையும், அதே நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியில் உள்ள பாண்டியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கழகம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு. எஸ். கார்த்திகேயன் தலைமையில் கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு. குலோத்துங்கன், நகர செயலாளர் திரு. ரஞ்சித் குமார், ஒன்றிய செயலாளர்கள் திரு. ஜெயக்குமார், திரு. வீரமுத்து உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கழக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.