கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டு வரை பயணிகள் ரயில்களை இயக்கலாம் - இந்திய ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்

Jun 4 2020 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டு வரை பயணிகள் ரயில்களை இயக்கலாம் என, இந்திய ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்‍கப்பட்டதன் காரணமாக கடந்த 1-ம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி ஆகிய நான்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரயில் சேவை அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை தவிர்த்து மேலும் சில இடங்களுக்கு பயணிகள் ரயில்கள் சேவையை தொடங்கும்படி, இந்திய ரயில்வே துறைக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், திருச்சி - அரியலூர் - விழுப்புரம், செங்கல்பட்டு மார்க்கம், மற்றும் அரக்கோணம்- காட்பாடி- கோயம்புத்தூர் மார்க்கம், திருச்சி - கும்பகோணம் - மயிலாடுதுறை - விழுப்புரம் மார்க்கமாக செங்கல்பட்டு வரை பயணிகள் ரயிலை இயக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00