செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமனம் - மத்திய அரசு அறிவிப்பு
Jun 2 2020 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், முதல் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக திரு.ஆர்.சந்திரசேகரனை நியமிப்பதாகவும், தமிழ் மொழியை மேம்படுத்த மத்திய அரசின் பங்களிப்பாக புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.