விதிமுறைகளை மீறும் சலூன் கடைகளுக்கு 4 மாதங்கள் வரை சீல் வைக்க நேரிடும் - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
Jun 2 2020 11:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றாத சலூன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குடிசைப் பகுதிகளில் கண்காணிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடைபெறுவதாகவும், மக்கள் அடர்த்தி காரணமாகவே தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் தொற்று அதிகம் பரவுவதாகவும் கூறினார்.