நாகர்கோவிலில் வெட்டுக்கிளி தாக்குதலில் சேதமடைந்த வாழை, ரப்பர் பயிர்கள்
Jun 1 2020 6:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகர்கோவிலில் வெட்டுக்கிளி தாக்குதலில் சேதமடைந்த பயிர்களை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் எம்.பி. பார்வையிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே முளவிளை பகுதியில் தாமஸ் அபிரகாம் என்பவரது தோட்டத்தில் சில தினங்களுக்கு முன் நுழைந்த வெட்டுக்கிளிகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் ரப்பர் பயிர்களை சேதப்படுத்தின. இந்நிலையில், சேதமடைந்த பயிர்களை கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் நேரில் செய்து ஆய்வு செய்தார்.