திருச்சியில் கஞ்சா பதுக்கி விற்பனை : 4 பேர் கைது
Jun 1 2020 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மணப்பாறை மோர்குளம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக, வந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, மணப்பாறையைச் சேர்ந்த சதீஷ் குமார், விஜய், தர்மராஜ், தஞ்சாவூர் மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.