சென்னையில் கால்டாக்சி, ஆட்டோக்கள் இயங்க அனுமதி : நீண்ட நாட்களுக்குப் பிறகு சாலைகளில் உலா வரும் ஆட்டோக்கள்
Jun 1 2020 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தடை விதிக்கப்பட்டிருந்த ஆட்டோ போக்குவரத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் ஓடத் தொடங்கியது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பாதிப்பு இல்லாத பல மாவட்டங்களில், தமிழக அரசு நிபந்தனைகளுடன் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள், கால் டாக்சிகள் உள்ளிட்டவைகள் குறைவான பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, சாலைகளில், ஆட்டோக்கள் செல்வதை காண முடிகிறது. ஆட்டோக்களில் 2 பயணிகள் முகக்கவசம் அணிந்து ஏற்றிச் செல்லலாம் என்றும், அதேபோல் கால் டாக்ஸிகளில் 3 பயணிகள் ஏற்றிச் செல்லலாம் என்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது.