சென்னை ஐ.ஐ.டி.யில் 400-க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்பில் சேர விண்ணப்பப் பதிவு தொடக்கம்
Jun 1 2020 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஐ.ஐ.டி.யில் 400-க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது.
சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டில் சென்னை ஐ.ஐ.டி.யால் இலவசமாக வழங்கப்படும் ஆன்லைன் படிப்புகளில் சேர விரும்புவோர் onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைன் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழுடன் 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் படிப்புகளை நிறைவுசெய்த மாணவர்கள் தங்களுக்கான 20 சதவீத மதிப்பெண்களை, அவரவர் பயிலும் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டருக்கான மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு முடித்து பொறியியல் கலந்தாய்வை எதிர்நோக்கி உள்ள மாணவர்களுக்கு பிரத்யேகமாக, சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் பொறியியல் தொடர்பான வகுப்புகளையும் இலவசமாக ஆன்லைனில் எடுக்க உள்ளதாகவும் சென்னை ஐ.ஐ.டி. அறிவித்துள்ளது.