போரூரில் 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்துவந்தவர் உடல்க்குறைவால் உயிரிழப்பு : இறுதிச்சடங்கு செய்த மக்கள்
Jun 1 2020 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை, போரூரில் சாலையோரம் இறந்துகிடந்த பிச்சைக்காரருக்கு அப்பகுதி மக்கள் இறுதிச் சடங்கு செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
போரூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள், ஒன்று சேர்ந்து அந்த நபரின் உடலை போலீசாரின் அனுமதி பெற்று தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து இறுதிச் சடங்கை மேற்கொண்டனர். இறந்தவரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்து, போரூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்தனர்.