சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2,737 பேருக்கு நோய் தொற்று
Jun 1 2020 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனா தொற்று அதிகமுள்ள மண்டலங்களில், ராயபுரத்தில் தொடர்ந்து அதிகபட்ச பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு 2 ஆயிரத்து 737 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 14 ஆயிரத்து 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 60 புள்ளி 51 சதவீத ஆண்களும், 39 புள்ளி 47 சதவீத பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 6 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 7 ஆயிரத்து 851 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், தற்போது வரை 122 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், வெளிமாநிலத்தை சேர்ந்த 108 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 798 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டையில் ஆயிரத்து 662 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 661 பேரும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து 556 பேரும், அண்ணாநகரில் ஆயிரத்து 237 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கத்தில் 871 பேருக்கும், அடையாறில் 834 பேருக்கும், அம்பத்தூரில் 561 பேருக்கும், திருவொற்றியூரில் 484 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரத்தில் 364 பேரும், சோழிங்கநல்லூரில் 255 பேரும், பெருங்குடியில் 251 பேரும், மணலியில் 204 பேரும், ஆலந்தூரில் 213 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.