தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக கூறி அமைச்சரை முற்றுகையிட்ட இளம்பெண் - குறைந்த எடையில் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு
Jun 1 2020 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி தரமற்று இருப்பதாகவும், குறைந்த எடையில் பொருட்கள் வழங்கப்படுவதாகவும்கூறி அமைச்சர் செல்லூர் ராஜுவை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவந்த அமைச்சர் செல்லூர் ராஜூவை இளம்பெண் ஒருவர் திடீரென முற்றுகையிட்டார். அப்போது, ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாகவும், குறைந்த எடையோடு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அமைச்சர், ரேஷன் கடை ஊழியரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதுடன், அங்கு அனுமதியின்றி பணியில் இருந்த மற்றொரு நபரையும் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.