விழுப்புரம் மாவட்டத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை வேண்டும் : அமைச்சரை முற்றுகையிட்டு கிராமமக்கள் முழக்கம்
May 31 2020 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை அளிக்க வலியுறுத்தி, அமைச்சர் சி.வி.சண்முகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைப்பாளையம் கிராமத்திற்கு வந்த அமைச்சர் திரு.சி.வி.சண்முகத்தை கிராமமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதில்லை என்றும் அரசின் சலுகைகள் தங்கள் கிராமத்திற்கு கிடைப்பதில்லை என்றும் அப்போது சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனையடுத்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.