சேலத்தில் செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
May 31 2020 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் அடுத்தடுத்து மூன்று செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200-க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டியார் நகர் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செல்போன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள மூன்று கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.