ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் வருகை
May 31 2020 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு செல்லவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்துள்ளது. பிலிகுண்டுலு பகுதியில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விடுமுறை தினமான இன்று, ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ஒகேனக்கல் மெயின் அருவிக்கு வருகை தந்தனர். நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.