சென்னையை விடாது துரத்தும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 324 பேர் கொரோனாவால் பாதிப்பு
May 29 2020 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 762 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் விவரங்களை, தற்போது மண்டல வாரியாக காண்போம்.
சென்னையில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 646 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டையில், ஆயிரத்து 412 பேரும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து 393 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 322 பேரும், அண்ணாநகரில் ஆயிரத்து 89 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கத்தில் 794 பேரும், அடையாறில் 719 பேரும், அம்பத்தூரில் 516 பேரும், திருவொற்றியூரில் 377 பேரும், மாதவரத்தில் 280 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோழிங்கநல்லூரில் 219 பேரும், பெருங்குடியில் 217 பேரும், ஆலந்தூரில் 178 பேரும், மணலியில் 175 பேரும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.