சென்னை விமான நிலையத்தில் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : கொரோனாவில் இருந்து பயணிகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை
May 28 2020 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உயர்மட்ட ஒருங்கிணைந்த அதிகாரிகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம், தென் மண்டல விமானநிலைய ஆணையக இயக்குனர் திரு. மாதவன் தலைமையில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகள் குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில் பயணிகளின் உடல் வெப்பநிலையை தீவிரமாக கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா, அரசுத் துறை அதிகாரி திரு. பழனிச்சாமி, ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. திரு. சைலேந்திர பாபு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.