சேலத்தில் அனுமதியின்றி இயங்கிய 2 குடிநீர் ஆலைக்கு சீல்
May 28 2020 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் அனுமதியின்றி இயங்கிவந்த 2 குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள அமராவதி நகரில் குடிநீர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனிகளில் தரமற்ற குடிநீர் மற்றும் சுகாதாரம் இல்லாமல் குடிநீர் தயாரிக்கப்படுவதாக சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குடிநீர் கம்பெனிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கம்பெணிக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோன்று மற்றொரு பகுதியில் அனுமதியின்றி இயங்கிவந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.