வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
May 26 2020 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்தமிழகம், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.