வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக்கோ பயன்படுத்தக்கூடாது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை
May 26 2020 6:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீா் ஆதாரமாக வைகை அணை விளங்கி வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் உறை கிணறுகளில் தண்ணீா் இன்றி காணப்படுவதால், வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா். அவர்களின் கோரிக்கையை ஏற்று, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள வைகை ஆற்றில் போடப்பட்ட உறைகிணறு மூலம், 500-க்கும் மேற்பட்ட குடிநீர்ஆதாரங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் 28 ஆம் தேதி மாலை 6 மணிவரை மட்டும் இந்த கனஅடி தண்ணீர் திறக்கப்படும். 28ம் தேதி வரை 216 மில்லியன்கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீரை பாசனத்திற்கோ அல்லது வேறு தொழில் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.