சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 61 நாட்களுக்குப் பிறகு சுமார் ஆயிரத்து 500 சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கின - 25 சதவீத பணியாளர்களுக்கு அனுமதி
May 25 2020 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழில்துறை பூங்காவாக விளங்கக்கூடிய அம்பத்தூர் தொழிற்பேட்டையானது 61 நாட்கள் பொது முடக்கத்திற்கு பிறகு, 25 சதவீத பணியாளர்களுடன் மீண்டும் செயல்பட தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் இங்குள்ள தொழிற்சாலைகள் 25 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படவும் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 61 நாட்களாக மூடப்பட்டிருந்த சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்று முதல் செயல்பட தொடங்கியது. இங்கு ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் சார்ந்த உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டும், அவர்கள் வாகனங்களூக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.