ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று - சென்னையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்‍கை அதிகரிப்பு

May 25 2020 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ராயபுரத்தில் இன்று மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்தை கடந்தது.

சென்னையில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தில் இதுவரை ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று மேலும் 90 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. புதிதாக நோய் கண்டறியப்பட்டவர்கள், ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை பூரண குணமடைந்து 803 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிப்பட்டிருந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00