ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை
May 25 2020 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம், முருகன் கிணறு, ஜி.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சூறாவளி காற்றில் முறிந்து விழுந்ததால் லட்சக் கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.