சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு 2 சக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகளுக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி
May 25 2020 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தை மற்றும் மகளுக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் அச்சங்குளம் பகுதிக்கு வந்த தந்தை மற்றும் 12 வயது மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊரான விளவங்கோடு பகுதிக்கு லாறியில் வந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும் ஆசிரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.