கொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்கை
May 25 2020 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தையும், 600 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 759 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கொரோனா பாதிப்பு நேற்று பதிவானது. கொரோனாவுக்கு எதிராகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தபோதிலும் வைரஸ் பரவலின் வேகம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் மிக அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்காணிக்கும் வகையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.