இந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை
May 25 2020 10:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள 11 மாநகராட்சிகளில், சென்னை 2 ஆம் இடத்தில் உள்ளது.
சென்னை மாநகரில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் மும்பை நகரும், இரண்டாம் இடத்தில் சென்னையும், 3-ம் இடத்தில் அகமதாபாத்தும் உள்ளன. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சியில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் 2 மாதங்களில் இந்த மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்பை பலபடுத்தாவிட்டால் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, அடுத்த 2 மாதங்களில் வீடு வீடாகப் பரிசோதனை, சமூக விலகல், முகக் கவசம் தனிமைப்படுத்தல் ஆகியவை மேலும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது.