C- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு
Apr 21 2020 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள C- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவியை, மதுரையைச் சேர்ந்த இளம் பொறியாளர் கண்டுபிடித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், முகக் கவசம் அணிந்து கொள்வது, கைகளை அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, முக கவசம், கையுறைகள் போன்றவற்றின் விலையும் அதிகரித்து வருவதோடு, தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த இளம் பொறியாளர் சுந்தரேஸ்வரன் என்பவர், கிருமிநாசினி மின்சாரத்தை பயன்படுத்தி C -RAY கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவியை, மதுரையைச் சேர்ந்த இளம் பொறியாளர் கண்டுபிடித்துள்ளார். இதற்கு இசட் பாக்ஸ் என பெயர் வைத்து வடிவமைத்துள்ளார். இந்த கருவி, அனைத்து வீடுகளிலும், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.