ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகளில் திருட்டு எதிரொலி : வாணிபக் கிடங்கில் வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு

Apr 9 2020 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற திருட்டு எதிரொலியால், திருச்சி மாவட்டம் முசிறி டாஸ்மாக் மதுபான கிடங்கில், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அரசு மதுபான கடைகளில் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. மதுபாட்டில்கள் திருட்டுபோவதை தடுக்கும் விதமாக மதுக்‍கடைகளிலிருக்கும் மதுபாட்டில்கள், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் முசிறி நுகர்பொருள் வாணிபக்‍ கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டன. முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, பெட்டவாய்த்தலை, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த மதுக்கடைகளிலிருந்து எடுத்துவரப்பட்ட மதுபாட்டில்கள் கணக்கிடப்பட்டு, வாணிப கிடங்கில் வைக்‍கப்பட்டு சீல்வைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00