தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாவது நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளதாக முதலமைச்சர் பேட்டி - இரண்டாவது நிலையிலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்
Apr 9 2020 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா நிலைமையை பொறுத்தே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்று 3-ம் நிலைக்கு செல்லக்கூடிய அபாயம் இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி, 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், 40 லட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். கொரோனா தடுப்பு பணியின்போது நேற்று உயிரிழந்த சென்னை மயிலாப்பூர் காவல்நிலைய போக்குவரத்துக் காவலர் திரு. வருண்காந்தி குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்றும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.