சென்னையில் பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து காவலர் : சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட காவலரின் உடல்
Apr 9 2020 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த மயிலாப்பூர் போக்குவரத்து காவலரின் உடல், இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த வருண் காந்தி என்பவர், மயிலாப்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பணிக்கு வந்த இவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சக காவலர்கள் வருண்காந்தியை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காவலர் வருண் காந்தி நேற்று மாலை உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் வருண் காந்தியின் உடல் சொந்த ஊரான வடுவூர் கிராமத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.