அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் : தூய்மை பணியாளர்களுக்கு மளிகைப் பொருட்கள் விநியோகம்
Apr 9 2020 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்பேரில், ஏழை எளிய மக்களுக்கு, கழக நிர்வாகிகள் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் மேற்கு ஒன்றியம் மெதூர் ஊராட்சிக் கழகம் சார்பில், வீடுகளுக்கு கழகத்தினர் நேரடியாகச் சென்று கபசுர மூலிகை குடிநீரை வழங்கினர். மெதூர் ஊராட்சி செயலாளர் திரு. கண்ணன், ஒன்றிய இணைச் செயலாளர் திரு. மகேந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் திரு. வினோத்குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. கரிகாலன், ஆலந்தூர் பகுதிக் கழகச் செயலாளர் திரு. ஏ.என். லட்சுமிபதி ஆகியோர் ஏற்பாட்டின்பேரில், ஆதம்பாக்கம் திருவள்ளூர் சாலை, ஆஃபீசர் காலனி, மஸ்தான் தெரு உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு, அரிசி, பருப்பு, கோதுமை, காய்கறிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்கப் பிரிவு சார்பில், தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் சண்முககுமாரி தலைமையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நரிக்குறவ மக்களுக்கு, அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் திரு. பால்பாண்டி, வட்டச் செயலாளர் திரு. கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.