கேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு : வழக்கு பதிவு செய்வதாக போலீசார் மீது கேபிள் டிவி பணியாளர்கள் புகார்
Apr 9 2020 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொலைக்காட்சி சேனல்கள், ஊடகங்கள் வரிசையில், அத்தியாவசிய சேவைகளுக்குள் வரும் கேபிள் டிவி பணியாளர்களுக்கும் ஊரடங்கிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களும் அத்தியாவசிய சேவைகளுக்குள் வரும் நிலையில், தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பில், முக்கிய பங்கு வகிக்கும் கேபிள் டிவி பணியாளர்களுக்கும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேபிள் டிவி பணியாளர்கள் வேலைத் தொடர்பாக, அடையாள அட்டையுடன் வெளியே சென்றாலும், போலீசார் விதிமீறலில் ஈடுபட்டதாக அபராதம் விதிப்பதாகவும், வழக்குப் பதிவு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள கேபிள் டிவி பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது மற்றும் அபராதம் விதிப்பது, சட்ட விரோதம் என்பதையும் போலீசார் கவனத்தில் கொள்ள வேண்டும்.