நாகை மாவட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்த 10 பேர் உட்பட 12 பேர் மீது வழக்குபதிவு : ஊரடங்கை மீறியதால் பாஸ்போட்டையும் கைப்பற்றி போலீசார் நடவடிக்கை
Apr 9 2020 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில், கொரோனா விதிமுறைகளை மீறிய புகாரில் சுற்றுலா வழிகாட்டி 2 பேர் உட்பட 12 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறையில் பிரான்ஸ், பெல்ஜியம், கேமரூன், காங்கோலேஸ் உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேரும், பீகார், மகாராஷ்டிராவை சேர்ந்த 2 சுற்றுலா வழிகாட்டிகளும் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதாரத்துறையினர், 12 பேரை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. ஆனாலும் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் அந்த 12 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து, பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்தனர்.