தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரிப்பு - 8 பேர் பலி
Apr 9 2020 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், மேலும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 738 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் திருமதி பீலா ராஜேஷ், ஏற்கனவே 690 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் சேர்த்து, இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 738-ஆக அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 48 பேரில், 42 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் 5 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் திருமதி பீலா ராஜேஷ் கூறினார்.