தஞ்சையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
Apr 8 2020 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. டெல்லியில் இருந்து திரும்பிய சுந்தரம் நகரைச் சேர்ந்த ஒருவரும், அவரது மருமகளும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பரிசோதனையில், மருமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனிடையே கர்ப்பிணி பெண்ணிற்கு, மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாய் மற்றும் சேய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.