திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்த 6 பேர் கைது - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைப்பு
Apr 8 2020 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
144 தடை உத்தரவு உள்ள நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்த ஊழியர்கள் இருவர் உட்பட 6 பேரை, பொதுமக்கள் கடைக்குள் பூட்டி சிறை பிடித்தனர். பின்னர் தகவலின் பேரில் வந்த காவல் துறையினர், 6 பேரையும் மீட்டு, அவர்களிடமிருந்து 38 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.