மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறிகள் வினியோகிக்கும் திட்டம் சென்னையில் அறிமுகம்
Apr 8 2020 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறிகள் வினியோகிக்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
M Auto என்ற நிறுவனம் தயாரித்த மின்சார ஆட்டோக்கள் மூலம், பயணிகள் ஆட்டோக்கள், நடமாடும் டீக்கடைகள் போன்றவை செயல்பட்டு வருகின்றன. தற்போது தேசிய ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளதால், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப்பொருட்கள் வாங்க நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரத்திற்குள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனைவரும் வருவதால், சமூக விலகலை கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று, காய்கறிகள், கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்கும் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்கள் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படுகின்றன.